Skip to content

மலையை புனிதமாக்கும் பலி

  • by

கைலாஷ் மலை (அல்லது கைலாசா) என்பது சீனாவின் திபெத்திய பிராந்தியத்தில் இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு மலை. இந்துக்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை ஒரு புனித மலையாக கருதுகின்றனர். இந்துக்களைப் பொறுத்தவரை, கைலாஷ் மலை சிவபெருமானும் (அல்லது மகாதேவா), அவரின் துணைவியார் பார்வதி தெய்வமும் (உமா, கெளரி என்றும் அறியப்படுகிறார்) மற்றும் அவர்களின் புதல்வன் கணேஷ் தெய்வமும் (கணபதி அல்லது விநாயகர்) தங்குமிடமாகக் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை புனித சடங்கில் சுற்றி நடக்கவும், அது வழங்கும் ஆசீர்வாதத்தைப் பெறவும் யாத்திரை செய்கிறார்கள்.

பார்வதி குளிக்கும் போது கணேஷ் சிவனை பார்க்கவிடாமல் தடுத்தபோது சிவன் கணேஷஷின் தலையைக் துண்டித்து கொன்ற இடம் கைலாஷ் ஆகும். அதை தொடர்ந்து ஒரு யானையின் தலை அவரது உடற்பகுதியில் வைக்கப்பட்டபோது கணேஷ் மரணத்திலிருந்து சிவனிடம் எப்படி திரும்பினார் என்பது நன்கு அறியப்பட்ட கதையாகும். சிவபெருமான் தனது மகனை மரணத்திலிருந்து திரும்பப் பெறுவதற்க்காக அந்த யானை தனது தலையை தியாகமாக கணேஷுக்கு கொடுத்து இறந்தது. இந்த தியாகம்தான் கைலாஷ் மலையை, இன்றும் கருதப்படுகின்ற புனிதமான மலையாக மாற்றியது. பிரபஞ்சத்தின் ஆன்மீக மற்றும் மனோதத்துவ மையமான மேரு மலையின் வெளிப்பாடு கைலாஷ் என்றும் சிலர் கருதுகின்றனர். மேரு மலையிலிருந்து கைலாஷ் மலை வழியாக மையப்படுத்தப்பட்ட இந்த ஆன்மீகத்தை குறிக்கும் அடையாளங்களாக பல கோயில்கள் செறிவான வட்டங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

ஒரு மகனை மரணத்திலிருந்து திரும்பக் கொண்டுவரும்படி ஒரு மலையில் நடந்த பலியின் மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத்தினதுபொல, ஸ்ரீ ஆபிரகாம் மற்றொரு மலையான – மோரியா மலையில் – தனது மகனுடன் அதே அனுபவத்தை பெற்றிருந்தார். அதே தியாகம், இயேசுவின் அவதாரத்தில் ஒரு ஆழமான மனோதத்துவ யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அடையாளமாகும் – இயேசுவை குறித்த ஆன்மீக சொற்பொழிவாகும் . 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ ஆபிரகாமின் அனுபவங்களை எபிரேய வேதங்கள் தொடர்ந்து நமக்குத் தெரிவிக்கின்றன, அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன. இந்த அடையாளத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் எபிரேயர்களுக்கு மட்டுமல்ல ‘எல்லா தேசங்களுக்கும்’ஆசீர்வாதம் பெரும் என்று அது அறிவிக்கிறது. எனவே இக்கதையைக் கற்றுக்கொள்வதும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் பயனுள்ளதாகும்.

அந்த மலை ஸ்ரீ ஆபிரகாமின் பலியின் அடையாளம்

ஆபிரகாம் எப்படி இருந்தார் என்பதைப் பார்த்தோம், வெகு காலத்திற்கு முன்பே, தேசங்களை குறித்த வாக்குறுதியைக் பெற்றிருந்தார். யூதர்களும் அரேபியர்களும் இன்று ஆபிரகாமிலிருந்து வந்தவர்கள், ஆகவே வாக்குறுதி நிறைவேறியது என்பதையும் அவர் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளார் என்பதையும் நாம் அறிவோம். ஆபிரகாம் இந்த வாக்குறுதியை நம்பியதால் அவருக்கு நீதியளிக்கப்பட்டது  – அவர் மோக்ஷத்தை அடைந்தார் அவருடைய கடுமையான உழைப்பால் அல்ல, ஆனால் அவர் அதை ஒரு இலவச பரிசாகப் பெற்றார்.

சிறிது காலத்திற்குப் பிறகு, ஆபிரகாம் தான் நீண்டகாலமாக காத்திருந்த மகனாகிய ஈசாக்கை பெற்றார் (அவரிடமிருந்து இன்று யூதர்கள் தங்கள் வம்சாவளியைக் கண்டுள்ளனர்). ஈசாக்கு ஒரு இளைஞனாக வளர்ந்தான். ஆனால் பின்னர் கடவுள் ஆபிரகாமை வியத்தகு முறையில் சோதித்தார். முழுமையான விவரத்தை நீங்கள் இங்கே படிக்கலாம், இந்த புதிரான சோதனையின் பொருளைத் அறிய முக்கிய விவரங்களை நாம் பார்ப்போம் – நீதிக்கு எவ்வாறு பலன் அளிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

ஆபிரகாமின் சோதனை

இந்த சோதனை ஒரு கடுமையான கட்டளையுடன் தொடங்கியது:


தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் மகனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.

ஆதியாகமம் 22:2

ஆபிரகாம், கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி, ‘மறுநாள் அதிகாலையில் எழுந்து’ மற்றும் ‘மூன்று நாட்கள் பயணத்திற்கு பிறகு’ அவர்கள் மலையை அடைந்தார்கள். பிறகு

  தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து மகனை வெட்டுவதற்குத் தயாரானான்.

ஆதியாகமம் 22:9-10

ஆபிரகாம் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சென்றான். ஆனால் பின்னர் குறிப்பிடத்தக்க ஒன்று நடந்தது:

11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 தேவதூதன்: “உனது மகனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு மகனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.

13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் மகன் காப்பாற்றப்பட்டான்.

ஆதியாகமம் 22:11-13

கடைசி நேரத்தில் ஐசக் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு ஆபிரகாம் ஒரு ஆட்டுகிடாவை பார்த்து அவனுக்குப் பதிலாக பலியிட்டார். கடவுள் ஒரு ஆட்டுக்கிடாவை கொடுத்தார் அது ஈசாகிகின் இடத்தை எடுத்துக்கொண்டது.

பலியை பற்றி: ஒரு எதிர்கால கண்னணோட்டம்

அதன் பிறகு ஆபிரகாம் அந்த இடத்திற்கு பெயரிட்டார். அவர் அதை என்ன பெயரிட்டார் என்பதைக் கவனியுங்கள்.

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆதியாகமம் 22:14

ஆபிரகாம் அதற்கு ‘கர்த்தர் பார்த்துக்கொள்வார்  ’ என்று பெயரிட்டார். இங்கே ஒரு கேள்வி. அந்த பெயர் கடந்தகாலமா, நிகழ்காலமா அல்லது எதிர்காலமா? இது எதிர்காலத்தை தெளிவாக குறிக்கிறது. எல்லா சந்தேகங்களையும் நீக்க “… அது பார்த்துக்கொள்ளப்படும் ”  என்ற கருத்து மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. இது மீண்டும் எதிர்கால பதத்தில் உள்ளது – இதனால் எதிர்காலத்தையும் குறிப்பிடுகிறது. ஆனால் ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்கிடாவை (ஒரு ஆண் ஆடு) பலியிட்ட பிறகு இந்த பெயர் சூட்டப்பட்டது. ஆபிரகாம், அந்த இடத்திற்கு பெயரிடும் போது, ​​அந்த ஆட்டுக்குட்டியைக் குறிப்பதாகவும், தனது மகனுக்குப் பதிலாக பலியிடுவதாகவும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த சூழ்நிலையில் அது ஏற்கனவே பலியிடப்பட்டு எரிக்கப்பட்டது. ஆபிரகாம் – ஏற்கனவே இறந்துவிட்ட ,பலியிடப்பட்ட, எரிக்கப்பட்ட ஆட்டுக்கிடாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் – அந்த இடத்திற்கு அவர் ‘கர்த்தர் பார்த்துக்கொண்டார்  “என்று பெயரிட்டிருப்பார், அதாவது கடந்த காலத்தை குறிக்கிறது. மேலும் அந்தக் கருத்து இவ்வாறு கூறியிருக்கும் ‘இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது ’ “ கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று கூறப்படுகிறது. ஆனால் ஆபிரகாம் எதிர்கால பதத்தில் அதற்கு தெளிவாக பெயரிட்டார், எனவே ஏற்கனவே இறந்த மற்றும் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாவை  பற்றி நினைக்கவில்லை. அவர் வித்தியாசமான ஒன்றை அறிவொளி பெற்றார். ஏதோவொன்று எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவு அவருக்கு இருந்தது. ஆனால் என்ன?

பலி நடந்த இடம்

இந்த தியாகத்திற்காக ஆபிரகாம் வழிநடத்தப்பட்ட மலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்:

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், (2)

இது ‘மோரியா’வில் நடந்தது. அது எங்கே இருக்கிறது? ஆபிரகாமின் நாளில் (கிமு 2000) இது ஒரு வனப்பகுதி என்றாலும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு (கிமு 1000) தாவீது ராஜா எருசலேம் நகரத்தை அங்கே நிறுவினார், அவருடைய மகன் சாலமோன் அங்கே முதல் ஆலயத்தைக் கட்டினான். பின்னர் பழைய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்களில் படிக்கிறோம்:

 அப்பொழுது சாலொமோன் எருசலேமில் மோரியா மலையில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான், அங்கே கர்த்தர் தன் தகப்பனாகிய தாவீதுக்குத் தோன்றினார்

2 நாளாகமம் 3: 1

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆபிரகாமின் ஆரம்பகாலத்தில் (கிமு 4000) ‘மோரியா மலை ‘ வனாந்தரத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மலை உச்சியாக இருந்தது, ஆனால் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது மற்றும் சாலமோன் மூலமாக இஸ்ரவேலரின் மைய நகரமாக மாறியது, அங்கு அவர்கள் சிருஷ்டிகருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றுவரை அது யூத மக்களுக்கு புனித இடமாகவும் இஸ்ரேலின் தலைநகராகவும் உள்ளது.

இயேசு – இயேசுவை குறித்த ஆன்மீக சொற்பொழிவு – மற்றும் ஆபிரகாம் செலுத்திய பலி

புதிய ஏற்பாட்டில் இயேசு அழைக்கப்பட்ட பெயர்களைப் பற்றி இப்போது சிந்தியுங்கள். இயேசுவுக்கு பல பெயர்கள் இருந்தன. நாம் அறிந்தபடி மிகவும் பிரபலமான பெயர் ‘கிறிஸ்து ’ ஆகும். ஆனால் அவருக்கு இன்னொரு பெயர் கொடுக்கப்பட்டது, அதுவும் முக்கியமானது. இவ்வாரக யோவான் நற்செய்தி நூலில் யோவான் ஸ்நானகன் அவரைப் பற்றி சொல்வதைக் காண்கிறோம்:

  29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’

யோவான் 1:29

வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு ‘தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்கப்பட்டார். இப்போது இயேசுவின் வாழ்க்கையின் முடிவைக் கவனியுங்கள். அவர் எங்கே கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் ? அது எருசலேமில்தன் (இது நாம் பார்த்தது போல = ‘மோரியா மலை’). அவர் கைது செய்யப்பட்டபோது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

இயேசுவின் கைது, விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதல் ஆகியவை எருசலேமில் (= மோரியா மலை) நடந்தது. மோரியா மலையில் நடந்த சம்பவங்களை காலவரிசை காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாடு வரை மோரியா மலையின் வரலாற்று முக்கிய நிகழ்வுகள்

இப்போது ஆபிரகாமை சிந்தியுங்கள். ‘கர்த்தர் பார்த்துக்கொள்வார் ’ என்று ஏன் அவர் அந்த இடத்திற்கு வருங்கால பதமாக பெயரிட்டார்? மோரியா மலையில் அவர் இயற்றியதை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் தனது எதிர்காலத்தில் ஏதாவது ‘வழங்கப்படும்’ என்று அவர் எப்படி அறிந்து கொண்டார் ? இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் – அவரது சோதனையில் ஈசாக்கு (அவரது மகன்) கடைசி நேரத்தில் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டார், ஏனெனில் அவருக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு ‘தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்கப்பட்டு அதே இடத்திலேயே பலியிடப்படுகிறார்! இது ‘அதே இடம்’ என்று ஆபிரகாமுக்கு எப்படித் தெரியும்? படைப்பாளரான கடவுளிடமிருந்து பிரஜாபதியிடமிருந்து ஞானஒளி பெற்றிருந்தால், அவர் குறிப்பிடத்தக்க ஒன்று நடைபெறப்போகிறது  என்று அறிந்திருக்க முடியும்.

ஒரு தெய்வீக சிந்தை வெளிப்படுத்தப்படுகிறது

2000 ஆண்டுகளின் வரலாற்றால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இருப்பிடத்தால்  இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரு சிந்தை உண்டாகிறது.

இயேசுவின் பலியைப் பற்றி சிந்திக்க வைப்பதற்காக ஆபிரகாமின் தியாகம் ஒரு அடையாளமாக இருந்தது – 2000 ஆண்டுகளை முன்னோக்கி சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய நிகழ்வு (ஆபிரகாமின் தியாகம்) பிற்காலத்தில் (இயேசுவின் தியாகம்) எவ்வாறு குறிக்கிறது என்பதைக் இந்த பிற்கால நிகழ்வை நமக்கு நினைவூட்டுவதற்காக கட்டமைக்கப்பட்டது. இந்த சிந்தை (படைப்பாளியாகிய கடவுள்) ஆயிரக்கணக்கான ஆண்டுகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சான்று இது. கடவுள் ஆபிரகாம் மூலம் பேசினார் என்பதற்கான அறிகுறியாகும்.

உங்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல செய்தி

மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கணக்கு நமக்கு முக்கியமானது. முடிவாக, கடவுள் ஆபிரகாமுக்கு அதை அறிவித்தார்

 “…உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (ஆதியாகமம் 22: 18)

உங்கள் மொழி, மதம், கல்வி, வயது, பாலினம் அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும் – நீங்கள் ‘பூமியிலுள்ள சகல ஜாதிகளும்’ சேர்ந்தவர் ! இது உங்களுக்கு குறிப்பாக வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். வாக்குறுதி என்ன என்பதைக் கவனியுங்கள் – கடவுளிடமிருந்து ஒரு ‘ஆசீர்வாதம்’! இது யூதர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த ‘ஆசீர்வாதம்’ எவ்வாறு வழங்கப்படுகிறது? இங்கே ‘சந்ததி’ என்ற சொல் ஒருமையில் உள்ளது. இது சந்ததிகள்  என்று பல மக்களை குறிப்பதாய் அல்ல, ஆனால் ‘அவர்’ என்று ஒருமையில் உள்ளது. இது பல நபர்கள் அல்லது ஒரு குழு மூலம் என்று குறிப்பிடும்படி ‘அவர்கள்’ என்று அல்ல. எபிரேய வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி வரலாற்றின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி ‘நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்று சர்ப்பத்துக்கு சொல்லப்பட்ட அதே கருத்து புருசாவின் பலியை குறிப்பதாகும் (ஒரு ‘அவர்’) புருசசுக்தாவில் அருளப்பட்டது. இந்த அடையாளத்தின் மூலம் – மோரியா மலை (= எருசலேம்) – இந்த பண்டைய வாக்குறுதிகளுக்கு கூடுதல் விவரங்களைக் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமின் தியாகத்தின் விவரம் இந்த ஆசீர்வாதம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும், நீதியின் விலை எவ்வாறு செலுத்தப்படும் என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

கடவுளின் ஆசீர்வாதம் எவ்வாறு பெறப்படுகிறது?

ஈசக்கை மரணத்திலிருந்து காப்பாற்றும்படி ஆட்டுக்குட்டி ஈசாக்கின் இடத்தில் பலியானதுபோல, தேவ ஆட்டுக்குட்டி, அவருடைய தியாக மரணத்தால், மரணத்தின் சக்தியிலிருந்தும் தண்டனையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றினார். திருமறை அதை அறிவிக்கிறது

… பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6: 23)

நாம் செய்யும் பாவங்கள் மரணத்தை விளைவிக்கும் ஒரு கர்ம வினையை உருவாக்குகின்றன என்றும் சொல்லலாம். ஆனால் ஈசக்கிற்கு பதிலாக ஆட்டுக்குட்டி பலியாக செலுத்தப்பட்டது. ஆபிரகாமும் ஐசக்கும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் தகுதியாகும்படி அத்ற்க்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர் அதை ஒரு பரிசாகப் பெற முடியும். இதன் மூலம்தான் அவர் மோட்சத்தை அடைந்தார்.

இது நாம் பின்பற்றக்கூடிய வடிவத்தைக் காட்டுகிறது. இயேசு ‘உலகின் பாவத்தை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டி’. இது உங்கள் சொந்த பாவத்தையும் உள்ளடக்கியது. ஆகவே, ஆட்டுக்குட்டியான இயேசு மீட்பின் கிரயத்தை செலுத்தியதியதினால் உங்கள் பாவங்களை ‘நீக்க’ முன்வருகிறார். இதை நீங்கள் தகுதியினால் பெற முடியாது, ஆனால் நீங்கள் அதை ஒரு பரிசாகப் பெறலாம். புருசனாகிய இயேசுவை அழைத்து, உங்கள் பாவங்களை நீக்கும்படி அவரிடம் கேளுங்கள். அவரது தியாகம் அவருக்கு அந்த சக்தியை அளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுவால் ‘வழங்கப்பட்ட’ அதே இடத்திலிருந்தே, மோரியா மலையில் ஆபிரகாமின் மகன் பலியிட்டதன் குறிப்பிடத்தக்க கணக்கில் இது தற்செயலான நிகழ்வுகளைத் தாண்டி முன்னறிவிக்கப்பட்டது.

பஸ்கா பண்டிகையின் அடையாளத்தில் இது எப்போது நிகழும் என்பதை முன்னறிவிப்பதன் மூலம் இது தொடர்கிறது.

பைபிளின் மூலம் பயணத்தின் PDF ஐ ஒரு புத்தகமாகப் பதிவிறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *